Lyrics in Tamil
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்தது
வீட்டின் பக்கம் வந்தது
குடம் ஒன்று கண்டது
அந்தக் குடத்தின் அடியிலே
கொஞ்சம் தண்ணீர் இருந்தது.
கல்லைப் பொறுக்கிப் போடவே
தண்ணீர் மேலே வந்தது
ஆசை தீர குடித்தது
தாகம் தீர்ந்த காகமும்
வேகமாகப் பறந்தது.