Lyrics in Tamil
பட்டணம் போன பூனையாரே
பார்த்து வந்த காட்சி யென்ன
ஏழுநிலை மாடிகளில்
எதற்குமே கூரையில்லை
வாழுமெலி ஒன்றில்லை
வயிறொட்டி வந்தே னையா.
அடுக்களையிற் பாலில்லை
அங்கங்கே போத்திலிலே
அடைத்திருப்பார் நக்கவுமோர்
அரைச் சொட்டுக் கிடைக்கவில்லை.
சட்டியிலே மீனில்லை
சாத்தி வைப்பார் குளிரூட்டும்
பெட்டியிலே பிறகென்ன
பிடிக்கவில்லை பட்டணந்தான்.
அரணாகக் கோட்டைகளாம்
அதற்குள்ளே விசிறிகளாம்
பரணொன்று கிடைக்கவில்லை
பாழ்பட்ட பட்டணத்தில்
பையன்களும் துரத்துகிறார்
பாழ்பட்ட பட்டணத்தில்
பையவே ஓடிவந்தேன்
படுத்திருந்த பரணுக்கே